Events

Friday, August 5, 2011

அழகிய கையெழுத்து அனைவருக்கும் அமையுமா?


அழகான கையெழுத்து அமைவது
இயற்கையாக கிடைத்த வரம் என்பார்கள்.
அழகான கையெழுத்தானது படிக்கும் அனைவருக்கும்மகிழ்ச்சியை தருகிறது. எழுத்து என்பதும்  ஒரு ஓவியம்தான்.அந்த ஓவியத்தை அழகாய் தீட்ட வேண்டும் என்று பலரும்ஆசைப்பட்டாலும், அனைவருக்குமே அழகான கையெழுத்துஇயல்பாய் அமைந்துவிடுவதில்லை.

ஆனால் அழகான கையெழுத்து அமையப்பெறாதவர்கள்அதற்காக சோர்ந்துவிட வேண்டியதில்லை. உங்களின்கையெழுத்தை பயிற்சியின் மூலம் நன்றாக மாற்றும்வாய்ப்புகள் உள்ளன. எழுத்துக்களை கோடுகளின்அடிப்படையில் எழுதும்போது வேறுபடுவதில்தான் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மாறுபட்டுதெரிகிறது. எனவே முதலில் அதை சரிசெய்ய வேண்டும்.

உங்களின் எழுத்துக்கோர்வையில் ஏதாவது சில எழுத்துக்களோ அல்லது பல எழுத்துக்களோ சரியான வடிவம் இல்லாமல் இருந்து உங்களின் ஒட்டுமொத்த கையெழுத்து தோற்றத்தையே பாதிக்கலாம். எனவே நீங்கள் அத்தகைய எழுத்துக்களை அழகான வடிவத்தில் எழுத
 பழகவேண்டும். அழகான கையெழுத்திற்கு பெயர்பெற்றவர் அந்த எழுத்துக்களை எப்படி எழுதுகிறார்என்று பார்த்து அவரை பின்பற்ற முயற்சிக்கவும். சிலருக்கு ஒருசில எழுத்துக்கள் மட்டுமே பிரச்சினையாக இருக்கலாம். எனவே அவைகளை மட்டும் பயிற்சியின் மூலம் சரிசெய்தால், கையெழுத்து அழகாக மாறிவிடும்.

மேலும் கையெழுத்தை அழகாக மாற்றுவதில் இன்னொரு முக்கிய அம்சம் இடம். எழுத்துக்கு எழுத்து விடும் இடம், வார்த்தைக்கு வார்த்தை விடும் இடம் மற்றும் வரிக்கு வரி விடும் இடம் போன்றவை கையெழுத்தின் தோற்றத்தை மாற்றுகின்றன. எனவே இந்த வகையிலும் முறையானபயிற்சி நமக்கு வேண்டும். அழகான கையெழுத்துகளில் இந்த இடஅளவு எப்படி பின்பற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து நாமும் அதைப் பின்பற்றலாம்.

இப்படி பலமுறைகளைப் பின்பற்றி நமது கையெழுத்தை நாம் அழகாக மாற்றி, அதே அழகிய கையெழுத்தில் தேர்வை எழுதும்போது நாம் பெறும் மதிப்பெண்களுக்கு உத்திரவாதம் கிடைக்கும் என்று நம்பலாம். முன்பின் அறிமுகமே இல்லாத, யாரென்றே தெரியாத அதேசமயம் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு தேர்வாளர், உங்களின் விடைத்தாளை திருத்தும்போது உங்களைப் பற்றி மதிப்பிடும் வாய்ப்பினை பெறுகிறார். நீங்கள் எழுதியுள்ள பதில்களை அவர் படிக்கும் அதேவேளையில், உங்களின் கையெழுத்தே பிரதானமாகஅவருக்கு தெரியும். உங்களின் கையெழுத்துதான் விடைத்தாள் திருத்துபவருக்குமகிழ்ச்சியையோ அல்லது எரிச்சலையோ தருகிறது. அந்த மகிழ்ச்சியையும், எரிச்சலையும்பொறுத்துதான்  உங்களின் மதிப்பெண் அமைகிறது.

அதேசமயத்தில் தேர்வு நோக்கத்திற்காக மட்டுமே கையெழுத்தை மாற்ற வேண்டும் என்று மாணவர்கள் எண்ண வேண்டாம். தேர்வு என்பது சிறிய நோக்கம் மட்டுமே. உங்களின் அழகிய கையெழுத்தானது பார்க்கும் அனைவரையுமே சந்தோஷப்படுத்தும். எல்லோரது பாராட்டையும் எல்லா நேரத்திலும் பெற்றுத்தரும். அந்த பாராட்டானது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடுமட்டுமின்றி தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.
உங்கள் பகுதியில் சென்டர் ஆரம்பித்து வருமானம் பெற தொடர்பு கொள்க

சோலார் அகடாமி
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ணன்கோவில்,
நாகர்கோவில்-629001.
செல் 9443607174

No comments:

Post a Comment